Web Images Videos Maps News Shopping Google Mail more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
"விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  12 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Follow-up To:
Add Cc | Add Follow-up to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers that you hear
 
கிரிஜா மணாளன்  
View profile   Translate to Translated (View Original)
 More options 14 Mar, 01:15
From: கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
Date: Fri, 13 Mar 2009 18:15:43 -0700 (PDT)
Local: Sat 14 Mar 2009 01:15
Subject: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!
இந்து சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுப்பதில்லை.
"விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்பதை உலகுக்குக் காட்டவே,
நபிகள் நாயகம் பல விதவைப் பெண்களை மணம் செய்துகொண்டார்.

ஒரு இளம்பெண் விதவை ஆகிவிட்டால்,  அவளை உடனே வேறு ஒருவனுக்கு
கட்டிவைக்கவேண்டும்.  இல்லையேல் அவ்ள் வாழ்க்கையில் சிதறுண்டு
அழிந்துபோவாள். இதை உணர்த்துவதாகவே அமைந்திருக்கிறது வேளாண்மையில்
வழங்கப்படும் ஒரு பழமொழி.
 "அறுத்தால் கட்டு! அல்லது அழியும்!" - என்பதே அப்பழமொழி.

"வயலில் நெற்கதிர்களை அறுத்தால் உடனே கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவை
சிதறி அழிந்துபோகும்." என்பது பற்றி உருவான பழமொழி அது.

அவதான அருங்கலை விநோதராகவும், புலவர்களுக்குப் புலவராகவும், பாவலராகவும்,
நாவலராகவும் விளங்கிய செய்குத்தம்பிப் பாவலர் ஒரு சமயம் குமரி
மாவட்டத்தில், திருவிதாங்கோடு என்னுமிடத்தில் சீறாப்புராணச் சொற்பொழிவில்
இப்படிக் கூறியுள்ளார். 'விதவை மறுமண'த்தை ஆதரித்த பெருந்தகையாளர் அவர்
என்பது அவ்ர் சொற்பொழிவுகளிலிருந்து தெரியவருகிறது.

- கி.ம.


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile   Translate to Translated (View Original)
 More options 14 Mar, 06:27
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Fri, 13 Mar 2009 18:27:50 -1200
Local: Sat 14 Mar 2009 06:27
Subject: Re: [anbudan] "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

நல்ல தகவல்...

2009/3/13 கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Sakthi sakthithasan  
View profile   Translate to Translated (View Original)
 More options 14 Mar, 12:06
From: Sakthi sakthithasan <sakthisakthitha...@googlemail.com>
Date: Sat, 14 Mar 2009 05:06:25 -0700 (PDT)
Local: Sat 14 Mar 2009 12:06
Subject: Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!
அன்பின் கிரிஜா மணாளன்,

வழமை போலவே உங்கள் பயனுள்ள பதிவு.

அன்புடன்
சக்தி

On Mar 14, 6:27 am, jmms <jmmsan...@gmail.com> wrote:


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Chidambaram Kasiviswanathan  
View profile   Translate to Translated (View Original)
 More options 15 Mar, 03:10
From: Chidambaram Kasiviswanathan <cheena...@googlemail.com>
Date: Sun, 15 Mar 2009 08:40:13 +0530
Local: Sun 15 Mar 2009 03:10
Subject: Re: [anbudan] Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

அன்பின் கி.மா

இன்னும் விவாதத்தில் தான் இருக்கிறது இத்தலைப்பு

ஆனால் நாளுக்கு நாள் விதவைத் திருமணம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆண் மறு
மணம் செய்து கொள்ளும் போது பெண் ஏன் செய்து கொள்ளக் கூடாது.

பதிவிற்கு நன்றி

நட்புடன் ..... சீனா
-----------------------------

  2009/3/13 கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
சுமதி  
View profile   Translate to Translated (View Original)
 More options 15 Mar, 05:34
From: சுமதி <sumathi.sunth...@gmail.com>
Date: Sat, 14 Mar 2009 22:34:52 -0700 (PDT)
Local: Sun 15 Mar 2009 05:34
Subject: Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

> இந்து சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுப்பதில்லை.

சமீபத்தில் இந்துத் திருமணச் சட்டத்தில் இருவரும் மனமொப்பி விவாகரத்து
செய்து கொள்ளுகிற வசதியளிக்கிற பிரிவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி முன்னைப்போல கணவன்-மனைவி இருவரும் தாமாகவே முன்வந்து விவாகரத்து
கோரினாலும் கிடைப்பதில் புதிய சிக்கல்கள் எற்பட்டுள்ளன. இருபத்தியோராம்
நூற்றாண்டில் சட்டங்களிலேயே இன்னும் பத்தாம்பசலித்தனம் இருக்கிறபோது,
விதவைத் திருமணங்கள் குறித்து எப்போதோ இருந்த கட்டுப்பாடுகளைப் பற்றி
குறைப்பட்டு என்ன பயன்?

எனக்குத் தெரிந்து பல விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள் மறுமணம் செய்து
கொண்டு தானிருக்கிறார்கள். மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
மெதுவாய் ஆனால் உறுதியாய்....

எஸ்.சுமதி


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
கிரிஜா மணாளன்  
View profile   Translate to Translated (View Original)
 More options 15 Mar, 13:38
From: கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
Date: Sun, 15 Mar 2009 06:38:52 -0700 (PDT)
Local: Sun 15 Mar 2009 13:38
Subject: Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!
விதவைகளுக்கு மறுமணம் செய்துவைக்க பெரும்பாலும் பெற்றோர் விரும்பாமல்,
அவர்கள் படிப்புக்குத்தக்க வேலையில் அமர்த்தி அவர்களைச்
சம்பாதிக்கவைப்பதே இப்போது பல குடும்பங்களில் நடக்கிறது.

மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்ற தீர்மானத்தை அந்தப் பெண்ணே
முழுமனத்தோடு எடுத்து, அவள் முடிவை செயல்படுத்திக்கொள்ளவேண்டும்.

மாறிவரும் இச்சமுதாயத்தில் அந்த விழிப்புணர்வை உண்டாக்குவது அவசியம்.

- கி.ம.


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Tthamizth Tthenee  
View profile   Translate to Translated (View Original)
 More options 15 Mar, 13:42
From: Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
Date: Sun, 15 Mar 2009 19:12:48 +0530
Local: Sun 15 Mar 2009 13:42
Subject: Re: [anbudan] Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

பெற்றவர்களே அந்தப் பெண்ணை மீண்டும் ஒரு தகுதியான ஆடவனுக்கு திருமணம் செய்து
கொடுக்க வேண்டும்
நாலுபேர் என்ன பேசுவார்களோ என்று பயப்படாமல்
நாலுபேர் எந்த உதவிக்கும் வரமாட்டார்கள்
பேச மட்டுமே வருவார்கள்
இந்த விழிப்புணர்வு பெற்றவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/3/15 கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>

> விதவைகளுக்கு மறுமணம் செய்துவைக்க பெரும்பாலும் பெற்றோர் விரும்பாமல்,
> அவர்கள் படிப்புக்குத்தக்க வேலையில் அமர்த்தி அவர்களைச்
> சம்பாதிக்கவைப்பதே இப்போது பல குடும்பங்களில் நடக்கிறது.

> மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்ற தீர்மானத்தை அந்தப் பெண்ணே
> முழுமனத்தோடு எடுத்து, அவள் முடிவை செயல்படுத்திக்கொள்ளவேண்டும்.

> மாறிவரும் இச்சமுதாயத்தில் அந்த விழிப்புணர்வை உண்டாக்குவது அவசியம்.

> - கி.ம.

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ
peopleofindia....@gmail.com
http://www.peopleofindia.net
rkc1...@gmail.com
http://thamizthenee.blogspot.com


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
சுமதி  
View profile   Translate to Translated (View Original)
 More options 16 Mar, 05:19
From: சுமதி <sumathi.sunth...@gmail.com>
Date: Sun, 15 Mar 2009 22:19:51 -0700 (PDT)
Local: Mon 16 Mar 2009 05:19
Subject: Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

> மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்ற தீர்மானத்தை அந்தப் பெண்ணே
> முழுமனத்தோடு எடுத்து, அவள் முடிவை செயல்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்து சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுப்பதில்லை.
"விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்பதை உலகுக்குக் காட்டவே,
நபிகள் நாயகம் பல விதவைப் பெண்களை மணம் செய்துகொண்டார்.

பொதுவாக, இந்தியாவில் விதவைகள் மறுமணம் அதிகம் நடப்பதில்லை என்று
கூறியிருக்கலாம். இன்றைக்கு இந்தியாவில் எல்லா சமுதாயங்களிலும் உள்ள
பெண்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகள் இருக்கிறதா? ஒரு குறிப்பிட்ட
மதத்தில் பெண்கள் வீட்டிலே தான் இறைவனை வழிபட வேண்டும் என்ற கட்டுப்பாடு
இருக்கிறதே? ஒரு குறிப்பிட்ட மதத்தில் பெண்களுக்கு சொத்துரிமை,
ஜீவனாம்சம் குறித்த சர்ச்சைகள் இன்னும் தீர்ந்தபாடில்லையே! எடுத்த
எடுப்பிலேயே ’இந்து சமயத்தில்’ என்று ஆரம்பித்திருப்பது சரியல்ல! ஊருக்கு
இளைத்தவனாகிக் கொண்டு வருகிறது இந்து சமயம்!

நபிகள் நாயகம் நான்கு விதவைகளை மணந்தது மாதிரி, ஒரு பெண் நான்கு கணவருடன்
வாழ்ந்தாள் என்று எழுத முடியுமா? ஏன் இந்த ஒப்பீடுகள்? விதவை மறுமணம்
என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஆண்கள் விதவைகளை மணம் செய்து
கொள்ள முன்வர வேண்டாமா? ஆணின் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா?

மனைவியை இழந்து குழந்தை குட்டியோடு இருக்கிற ஒருவன் இரண்டாம் திருமணம்
செய்து கொள்ளலாம். அதே நிலையில் இருக்கும் ஒரு விதவையை திருமணம் செய்து
கொள்ள யார் முன்வருவார்கள்? எனக்குத் தெரிந்து யாரோ ஒரு விளையாட்டு வீரர்
அப்படி செய்து கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.

ஆணும் பெண்ணும் சமம் என்று உலகுக்கு எடுத்துக் கூறத் தானே
அர்த்தநாரீஸ்வரர் என்று இறைவன் உருவமெடுத்தார்? ஐயையோ! இந்து மதக் கடவுள்
பற்றிப் பேசக் கூடாது இல்லையா? மறந்து விட்டேன்.

கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா - என்று புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன் கூடத் தான் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் இந்து சமயத்தைச்
சேர்ந்தவராயிற்றே! அவர் சொன்னதையெல்லாம் மேற்கோள் காட்டிப்பேசினால்
எப்படி நமது மதச்சார்பின்மையை நிரூபிப்பது?

திருமணம் என்பது ஆண்-பெண் இருவரது விருப்பங்களைப் பொறுத்தது. ஒரு
ஆணுக்குத் தனது திருமணம் பற்றி முடிவெடுக்க வழங்கப்பட்டிருக்கும் அனைத்து
அதிகாரங்களும் பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டும். அதற்கே இன்னும் வழி
முழுமையாகப் பிறந்தபாடில்லை.

இதை எழுதியிருப்பதற்காக நான் பெண்ணியம் பேசுவதாக எண்ண வேண்டாம். பெண்
குறித்த ஆணின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். அது
ஏற்படும்வரைக்கும் இந்த மகளிர் தினங்களெல்லாம் வருடாவருடம் நடத்தப்படுகிற
வெறும் சடங்கு! மறக்காமல் ஆளுக்கு ஒரு மலர்வளையம் வாங்கி வைக்கலாம்.

எஸ்.சுமதி


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
தமிழன் வேணு  
View profile   Translate to Translated (View Original)
 More options 16 Mar, 06:14
From: தமிழன் வேணு <venugopalan.ren...@gmail.com>
Date: Sun, 15 Mar 2009 23:14:57 -0700 (PDT)
Local: Mon 16 Mar 2009 06:14
Subject: Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

> மனைவியை இழந்து குழந்தை குட்டியோடு இருக்கிற ஒருவன் இரண்டாம் திருமணம்
> செய்து கொள்ளலாம். அதே நிலையில் இருக்கும் ஒரு விதவையை திருமணம் செய்து
> கொள்ள யார் முன்வருவார்கள்? எனக்குத் தெரிந்து யாரோ ஒரு விளையாட்டு வீரர்
> அப்படி செய்து கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு முன்னை விட அதிக சுதந்திரங்கள்
கிடைத்துக்கொண்டு தானிருக்கின்றன. மிகப் பழமையான கலாச்சாரம் நமது. இந்த
நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவே முன்னூறு வருடங்கள் பிடித்திருக்கின்றன.
பெண்களுக்கு சுதந்திரம் அளவுக்கதிகமாக வழங்கப்படுகிறதோ என்று கூட சில
ஆங்கிலத்தொலைக்காட்சிகளில் கருத்தரங்கங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
எனவே, எதுவுமே மாறவில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லி ஆண்களுக்கு
எரிச்சல் மூட்டுவதேனோ?

> ஆணும் பெண்ணும் சமம் என்று உலகுக்கு எடுத்துக் கூறத் தானே
> அர்த்தநாரீஸ்வரர் என்று இறைவன் உருவமெடுத்தார்? ஐயையோ! இந்து மதக் கடவுள்
> பற்றிப் பேசக் கூடாது இல்லையா? மறந்து விட்டேன்.

> கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா - என்று புரட்சிக்கவிஞர்
> பாரதிதாசன் கூடத் தான் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் இந்து சமயத்தைச்
> சேர்ந்தவராயிற்றே! அவர் சொன்னதையெல்லாம் மேற்கோள் காட்டிப்பேசினால்
> எப்படி நமது மதச்சார்பின்மையை நிரூபிப்பது?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவர். அவரை
ஒரு மதத்தில் கொண்டு போய் குறுக்கி விட முடியாது.

> திருமணம் என்பது ஆண்-பெண் இருவரது விருப்பங்களைப் பொறுத்தது. ஒரு
> ஆணுக்குத் தனது திருமணம் பற்றி முடிவெடுக்க வழங்கப்பட்டிருக்கும் அனைத்து
> அதிகாரங்களும் பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டும். அதற்கே இன்னும் வழி
> முழுமையாகப் பிறந்தபாடில்லை.

இரண்டு மதங்களைப் பற்றி ஒப்பீடு செய்வதைத் தவிர்த்திருக்கலாம் என்பது
உங்கள் ஆதங்கமென்றால் ஒப்புக் கொள்ளலாம். அதற்காக, ஒரேயடியாக ஆண்களின்
அணுகுமுறையைக் குறைசொல்லிக்கொண்டிருப்பதும், மதசார்பின்மையை ஏகடியம்
பேசிக்கொண்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

> இதை எழுதியிருப்பதற்காக நான் பெண்ணியம் பேசுவதாக எண்ண வேண்டாம். பெண்
> குறித்த ஆணின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். அது
> ஏற்படும்வரைக்கும் இந்த மகளிர் தினங்களெல்லாம் வருடாவருடம் நடத்தப்படுகிற
> வெறும் சடங்கு! மறக்காமல் ஆளுக்கு ஒரு மலர்வளையம் வாங்கி வைக்கலாம்.

ஒரு உதாரணத்துக்காக சொல்லுகிறேன். இதைப் படித்து விட்டு சாரத்தை விட்டு
விட்டு சக்கையை மட்டும் பிடித்துக்கொண்டு விடாதீர்கள் தயவு செய்து!
மங்களூரில் நடந்த வன்முறைக்குப் பிறகு, பெண்களும் ஆண்களுக்கு சமமாக
குடித்துக் கும்மாளம் போடலாம் என்று சி.என்.என்-ஐ.பி.என்னில் ஒரு
மணிநேரம் பேசித் தீர்த்தார்களே!

எல்லா விதத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துக்கொண்டு
தானிருக்கிறது. நாளைக்குக் காலையிலே பல் விளக்கும் முன்னரே வருவதற்கு
சுதந்திரம் ஒன்றும் பால் பாக்கெட் அல்ல!

தமிழன் வேணு


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
சுமதி  
View profile   Translate to Translated (View Original)
 More options 16 Mar, 07:53
From: சுமதி <sumathi.sunth...@gmail.com>
Date: Mon, 16 Mar 2009 00:53:05 -0700 (PDT)
Local: Mon 16 Mar 2009 07:53
Subject: Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

> எல்லா விதத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துக்கொண்டு
> தானிருக்கிறது. நாளைக்குக் காலையிலே பல் விளக்கும் முன்னரே வருவதற்கு
> சுதந்திரம் ஒன்றும் பால் பாக்கெட் அல்ல!

நீங்கள் தானே மகளிர் தினத்துக்கு மனமுருகப் பாடல் எழுதிய த.வே அய்யா?
சந்தேகமாயிருப்பதால் கேட்கிறேன்.

சுமதி


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
தமிழன் வேணு  
View profile   Translate to Translated (View Original)
 More options 16 Mar, 09:18
From: தமிழன் வேணு <venugopalan.ren...@gmail.com>
Date: Mon, 16 Mar 2009 02:18:29 -0700 (PDT)
Local: Mon 16 Mar 2009 09:18
Subject: Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

> நீங்கள் தானே மகளிர் தினத்துக்கு மனமுருகப் பாடல் எழுதிய த.வே அய்யா?
> சந்தேகமாயிருப்பதால் கேட்கிறேன்.

சந்தேகமிருந்தால் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்களேன்! நன்றி!

த.வே


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Poongulali  
View profile   Translate to Translated (View Original)
 More options 17 Mar, 06:39
From: Poongulali <poongulali.selvamu...@gmail.com>
Date: Tue, 17 Mar 2009 12:09:44 +0530
Local: Tues 17 Mar 2009 06:39
Subject: Re: [anbudan] Re: "விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

 எழுதியிருப்பதற்காக நான் பெண்ணியம் பேசுவதாக எண்ண வேண்டாம். பெண்
குறித்த ஆணின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். அது
ஏற்படும்வரைக்கும் இந்த மகளிர் தினங்களெல்லாம் வருடாவருடம் நடத்தப்படுகிற
வெறும் சடங்கு! மறக்காமல் ஆளுக்கு ஒரு மலர்வளையம் வாங்கி வைக்கலாம்.

என் தந்தை சொல்லி கேட்டு பின்பு நான் படித்த செய்தி இது ...காந்தியடிகள் இடம்
விதவைகள் மறுமணத்தை பற்றி கேட்ட போது அவர் ,"மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம்
செய்யக் கூடாது" என்று கூறினாறாம் .இதற்கு கோபமாக பாரதியார் ,"காந்தியடிகளிடம்
விதவைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வழி கேட்டால் அவர் விதவர்களின்
எண்ணிக்கையை கூட்டுவதற்கு வழி சொல்கிறார்," என்று .

பல துறைகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வந்தாலும் சுதந்திரம் அடைந்து
விட்டார்களா  என்பது சந்தேகமே . அதே போல் பல பெண்கள் இதை தவறாக புரிந்து கொண்டு...
பெண் சுதந்திர எதிர்ப்பாளர்களின் கையை வலுப்படுத்துகிறார்கள் .
2009/3/16 தமிழன் வேணு <venugopalan.ren...@gmail.com>


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message, you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google